ஜூலியானாவால் சமூகம் அழிகிறது!! ஆவேசம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜூலியானாவால் சமூகம் அழிகிறது!! ஆவேசம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் மீம்ஸ் போடுவது, ட்ரோல் வீடியோஸ் என்று நெட்டிசன்கள் படு பிஸியாகவே உள்ளனர்.
இந்நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்யப் போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜூலியானாவால் தமிழ்ச்சமூகம் சீரழிவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து 'இந்து மக்கள் கட்சியின் தலைவர்'அர்ஜூன் சம்பத் கூறும்போது, 'முழுக்க லிவிங் டுகெதர் கலாச்சாரம் கொண்ட இந்த நிகழ்ச்சி வெளிநாட்டிற்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சி இனியும் தொடர்ந்தால் தமிழ்ச்சமூகம் சீரழியும். எனவே இந்த நிகழ்ச்சியை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், ஒரு வயசுப்பெண் தன்னை கட்டிபிடிக்க யாருமே இல்லையா என்று பேசுவது அருவருக்கத்தக்க விஷயம்.
தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்க, ஜூலியானா போன்றவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட்டு, மேற்கத்திய நாகரிகத்தை தமிழ் மக்கள் மீது திணிக்கின்றனர். ஆகையால்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை எதிர்க்கிறோம்' என்று கூறினார்.
மேலும், கமல் சினிமாவில் வேண்டுமானால் சாதனை படைத்திருக்கலாம் ஆனால், சமூகத்தை சீரழிப்பதற்கு அவர் துணை போவதனை அனுமதிக்க முடியாது என்றார்.

About UK TAMIL NEWS