மோடிக்கு எதிராக மீம்ஸ் போட்டவர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏ.ஐ.பி என்ற காமெடி குழுவை சேர்ந்த ஒருவர் ரயில்நிலையத்தில் பிரதமர் மோடியை போல முக அமைப்பில் இருந்தவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இது முகநூல், ட்விட்டர், உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இது குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதற்கு காரணமான காமெடி நடிகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை பிரதமர் மோடியை இணையத்தில் விமர்சிப்பவர்களை மிரட்டும் விதமாக உள்ளது என ஒருசாரார் தங்களது கருத்துகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.