வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை பேராசிரியர் போல் நியூவ்மன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நீதிபதிகளின் முன்னிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.