முழங்காவிலில் சிறுவனை மோதி விட்டு தப்பியோடிய சாரதி கைது!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

முழங்காவிலில் சிறுவனை மோதி விட்டு தப்பியோடிய சாரதி கைது!!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் வாகனமொன்றில் மோதி விபத்திற்கு உள்ளாகிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய சாரதி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முழங்காவில் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்தபோது கார் மோதி சிறுவனொருவன் விபத்திற்கு உள்ளாகியிருந்தார்.
முழங்காவில் – நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற 11 வயது சிறுவனே கடந்த 17ஆம் திகதி இந்த விபத்தில் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில் சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தை தொடர்ந்து சாரதி தப்பியோடியதுடன், விபத்தின் போது வாகன இலக்க தகடு வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு பொது மக்களால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும் ஆரம்பகட்ட விசாரணைகள் கூட இடம்பெறவில்லை என தெரிவித்து, பொதுமக்கள் முழங்காவில் பொலிஸ் நிலையத்தின் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரியும், சட்டத்தை மீறிய வாகன சாரதியை கைது செய்ய கோரியும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தவறிய பொலிசாரை கண்டித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வாகன சாரதியை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS