வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா?

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது உணவுகள் சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?
பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவ்வாறு வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால், நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை குறைத்து, நம் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.
உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடலாமா?
உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடக் கூடாது. ஏனெனில் உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடுவதால், அந்த பழங்கள் மற்ற உணவுகளுடன் சேர்ந்து அழுகி வாயுவை உற்பத்தியாக்கி, வயிறு உப்பசத்தை ஏற்படுத்துகிறது.
பழங்களை உணவுக்கு பின் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
  • நரைமுடி ஏற்படும்.
  • தலையில் வழுக்கை தோன்றும்.
  • நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படும்.
  • கண்களின் கீழ் கருவளையம் உண்டாகும்.
குறிப்பு
பழங்களின் சாறு குடிப்பதை விட, பழமாக சாப்பிடுவதால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.
மேலும் 3 நாட்கள் தொடர்ந்து பழங்களை மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்தால், உடல் உறுப்புகள் சுத்தம் அடைவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றலாம்.

About UK TAMIL NEWS