விரைவில் பாப்பரசருடன் ஈழத்தமிழர் சந்திப்பு! விரிவடையும் விவகாரம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

விரைவில் பாப்பரசருடன் ஈழத்தமிழர் சந்திப்பு! விரிவடையும் விவகாரம்

விரைவில் பாப்பரசருடன் ஈழத்தமிழர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக தெற்காசிய யேசு சபையின் பயிற்றுவிப்பாளரும், பேராசிரியருமான அருட்தந்தை ராஜ் இருதயா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவு செய்யப்பட்டிருப்பதையிட்டு முழு உலகமே மகிழ்ச்சியடைந்துள்ளது.
காரணம், மனித உரிமைகள் பறிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அவருடைய அணுகுமுறை, செயன்முறை வித்தியாசமானது. அவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில், விரைவில் பாப்பரசருடன் ஈழத்தமிழர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள அருட்தந்தை ராஜ் இருதயா லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS