மணல் ஏற்றிய உழவு இயந்திர பெட்டியின் கீழ் நசியுண்டு குடும்பத்தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு – மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் கிளிநொச்சி, பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அர்ச்சுனம் முரளிதரன் (வயது – 42) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
“மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் பெட்டியின் சில்லு உடைந்துள்ளது. அதனைச் சீர்செய்வதற்காகப் பெட்டியை மேல் உயர்த்தப்பட்டது. அது ஓர் பக்கம் சரிந்து வீழ்ந்துள்ளது. அதற்குள் சிக்குண்டே குடும்பத்தலைவர் உயிரிழந்தார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.