யாழில் பிளாஸ்டிக் அரிசி, முட்டை கண்டால் அறிவியுங்கள்..! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழில் பிளாஸ்டிக் அரிசி, முட்டை கண்டால் அறிவியுங்கள்..!

நாட்டின் வர்த்­தக சந்­தையில் அல்­லது மக்­களின் பாவ­னைக்கு எந்­த­வ­கை­யி­லா­வது பிளாஸ்டிக் அரிசி அல்­லது பிளாஸ்டிக் முட்டை கிடைக்­கப்­பெற்றால் அது­தொ­டர் பாக சுகா­தார அமைச்­சுக்கு அறி­விக்­கு­மாறு சுகா­தார சேவை பணிப்­பாளர் நாயகம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
இது­தொ­டர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
யாழில் பிளாஸ்டிக் அரிசி நாட்டின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள­ தாக சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பிரசாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றது.
என்­றாலும் இது­தொ­டர்­பாக சுகா­தார அமை ச்­சுக்கு எந்த முறைப்­பாடும் கிடைத்த­தில்லை.
உலகில் பிளாஸ்டிக் அரிசி உற்­பத்தி செய்யும் ஒரே நாடாக சீனா இருந்து ­வ­ரு­கின்­றது. என்­றாலும் இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்­து­வ­கை­யான அரி­சியும் பரி­சோ­த­னைக்கு உட்­பட்­டதன் பின்­னரே விடு­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நிலை கார­ண­மாக நிவா­ர­ண­மாக நாட்­டுக்கு கிடைக்­கப்­பெற்ற அரிசி வகை­யிலும் இவ்­வா­றான பிளாஸ்டிக் அரிசி இருந்­த­தாக இது­வரை எந்த முறைப்­பாடும் செய்­யப்­ப­ட­வில்லை.
எனவே சமூகவலைத்­த­ளங்­களில் தெரி­விக்­கப்­ப­டு­வ­து­போன்று நாட்டில் எந்த வர்த்­தக சந்­தை­யி­லேனும் அல்­லது பொது­மக்­களின் பாவ­னைக்கு இவ்­வா­றான பிளாஸ்டிக் அரிசி அல்லது பிளாஸ்டிக் முட்டை இருப்பதை கண்டால் அது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு முறைப் பாடு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.

About UK TAMIL NEWS