சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த சிறுமி மரணம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த சிறுமி மரணம்

சமீபகாலமாக சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்த சிறுமி, அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில் தலைவீங்கியதால் திடீரென மரணம் அடைந்தார்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ரோனா பேகம், ஹைட்ரோசெஃபாலுஸ் (Hydrocephalus) என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப் பெண்ணின் தலை 94 செ.மீ. (37 இன்ச்) வீக்கம் அடைந்தது.
இதனால் அச்சிறுமியின் தலையின் பாரம் தாங்க முடியவில்லை, சரியாக மூச்சுவிடவும் முடியவில்லை. 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நியூ மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது.
ஆனாலும் அவருடைய பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை. விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த சிறுமி திடீரென மரணம் அடைந்தார்.
இந்த சிறுமியின் புகைப்படம் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் வைரலானது
குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS