சிவாஜிலிங்கம், றிசார்ட் பதியூதீன் ஆகியோருக்கு எதிராக விசாரணை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சிவாஜிலிங்கம், றிசார்ட் பதியூதீன் ஆகியோருக்கு எதிராக விசாரணை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கிடைத்துள்ள 21 முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அமைய, கலகொட அத்தே ஞானசார தேரர், அமைச்சர் றிசார்ட் பதியூதீன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவுகளை ஊடக நிறுவனங்களிடம் இருந்து பெற்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அது தொடர்பான விடயங்கள் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முதல் மத வழிபாட்டு தளங்கள்,வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,
அஸ்கிரிய பீடத்தின் சங்க சபை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அரசாங்கம் அறிக்கை வெளியிடும்.
ஞானசார தேரருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அதேபோல் சிங்களம்,முஸ்லிம்கள்,தமிழர்ளுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். பிக்குவாக இருந்தாலும் மத போதகராக இருந்தாலும் எவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்.
பிக்குமார் தமது கௌரவத்தை பாதுகாத்து கொண்டு நடந்து கொள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அதற்காகவே நாட்டில் ஒழுக்காற்று குழுக்கள் போன்றவை நியமிக்கப்பட்டுள்ளன. இப்படிதான் புத்தசாசனம் புத்த பகவானுக்கு பின்னர் இருந்தது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS