2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தமிழ் ஹிந்தி தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ள இவர், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
SS ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிய பாஹுபலி படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், பாஹுபலி இரண்டாம் பாகத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அதில், இவர் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
இவர் தற்போது, அம்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், திரைப்படத்தில் 72 வயது முதியவராக வரும் நடிகர் சிம்பு காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறார் என்றும், சமீப காலமாக நடிகை தமன்னாவுக்கு அவருடைய நடிப்புத் துறையில் கெட்ட காலம் தொடங்கிவிட்டது என்றும் சினித்துறையிலே பலர் கேலி செய்வதாக தெரிகிறது.
நடிகர் சிம்புவுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அந்த படத்தின் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஸ்ரேயாக்கு தான் முக்கிய கதாபாத்திரம் என்றவாறும் கூறப்படுகிறது.
இருப்பினும், படம் திரையிடப்பட்டு ரசிகர்களின் மனநிலையை வைத்து தான் எதையும் முடிவு செய்ய வேண்டும் என்றும், தன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புவதாகவும் தமன்னா தரப்பு தெரிவிக்கிறது.